டெல்லி: சமத்துவமின்மை இடைவெளியை குறைக்க பெரும் செல்வந்தர்களுக்கு கூடுதல் வரி விதிக்குமாறு 205 செல்வந்தர்கள் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பேரிடருக்கு பிறகு ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான சமத்துவமின்மை இடைவெளி மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 3ல் இரண்டு பங்கு புதிய செல்வங்களை வெறும் 1 விழுக்காடு பணக்காரர்களே பெற்று வருகின்றனர் என சமீபத்திய ஆக்ஸ்வாம் ஆய்வு கூறுகிறது. உலக கோட்டீஸ்வரர்களுக்கு கூடுதலாக 5 விழுக்காடு வரி விதித்தாலே 200 கோடி மக்களை வறுமையின் கோரத்தில் இருந்து மீட்க முடியும் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.