அகர்தலா: திரிபுரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் சேராது என்று அக்கட்சி அறிவித்துள்ளது. திரிபுராவில் முதல்வர் மாணிக் சாகா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி வரும்16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை தோற்கடித்து பாஜ முதல்முறையாக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜவை தோற்கடிக்க மார்க்சிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.