பழநி: கும்பாபிஷேகத்தையொட்டி பழநி பஸ் நிலையத்திலிருந்து கோயிலுக்கு இலவச பஸ் இயக்குவதென முடிவு செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று பழநியாண்டவர் மகளிர் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை வகித்தார். இதில் மாவட்ட கலெக்டர் விசாகன், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.