குடும்ப தகராறில் 2 குழந்தை கொலை தாய் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த செந்தாரப்பள்ளியைச் சேர்ந்தவர் கவுரி(26). இவரது கணவர் கெட்டூரை சேர்ந்த பேக்கரி மாஸ்டர் முத்துராஜ். இவர்களது மகன் ஜீவன்(4), மகள் பாவனாஸ்ரீ (2). முத்துராஜ் சரிவர வேலைக்கு செல்லாததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 17ம் தேதி தகராறு முற்றியதில் கவுரி குழந்தைகளுடன்  தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நேற்று முன்தினம் இரவு, 2 குழந்தைகளுக்கும் எலிபேஸ்ட் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுள்ளார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இருவரும் நேற்று மதியம் இறந்தனர். கவுரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: