புதுடெல்லி: அனைத்து மாநிலங்களின் டிஜிபிக்கள், ஐஜி க்கள் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்ளும் 3 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களை சேர்ந்த காவல்துறை தலைவர்களின் ஆண்டு கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்தது. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின்னர் இந்த கூட்டம் தலைநருக்கு வெளியே நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முறை கூட்டம் டெல்லியின் புசாவில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வருகின்றது. 3 நாள் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது.