புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது கடந்த டிசம்பர் 26ம் தேதி தெரியவந்தது. இதுதொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதைதொடர்ந்து ஏஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது. 85 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.