சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தடையை மீறி 2 கிராமங்களில் வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. கொட்டவாடி கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது முக்கிய வீதிகள் வழியாக வங்காநரியை ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தெருவில் ஓடவிட்டனர்.