சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய பொருளாதாரக் கொள்கைகளும், வரி விதிப்புகளும் எவ்வாறு பணக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது என்பது குறித்து ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. 2020-21ம் ஆண்டில் ஜி.எஸ்.டி வரி ரூ.14.83 லட்சம் கோடி, அதில் 97 சதவீதம் ரூ.14.40 லட்சம் கோடி ஏழை மற்றூம் நடுத்தர மக்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளது, பணக்காரர்களிடமிருந்து 3 சதவீதம் ரூ.44,000 கோடி மட்டுமே பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை, மாறாக ஏழைகள் பயன்படுத்தும் பொருட்கள் மீது தான் அதிக வரி விதிக்கப்படுகிறது என்பது தான் இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி.