காங்கோ தேவாலய குண்டுவெடிப்பில் 14 பேர் பலி: ஐஎஸ் பொறுப்பேற்பு

காசின்டி: உகாண்டா நாட்டின் எல்லையில் உள்ள கிழக்கு காங்கோ பகுதியில் காசின்டி நகரில் உள்ள பெந்தகோஸ்தே தேவாலயத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொதுமக்கள் நேற்று முன்தினம் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்த போது, வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: