பழநி கோயிலில் 27ம் தேதி கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு 18ம் தேதி முதல் கட்டணமில்லா முன்பதிவு துவக்கம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வரும் 27ம் தேதி, காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இணையதளம் மூலம் கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்கு கோயில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in  மற்றும் அறநிலையத்துறை இணையதளமான  www.hrce.tn.gov.in வலைதளங்களின் மூலம் பக்தர்கள் வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை கட்டணமின்றி முன்பதிவு செய்து கொள்ளலாம். பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், ரேசன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும். ஜன.21ம் தேதி குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள், 23, 24 ஆகிய தேதிகளில் அனுமதி சீட்டை பெற்று கொள்ளலாம்.

Related Stories: