ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி இளைஞர் தினவிழாவில் பங்கேற்க வந்த பிரதமரின் ரோட்ஷோவில் பலத்த பாதுகாப்பை மீறி அவருக்கு மாலை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஹூப்பள்ளியில் இளைஞர் தினவிழா நேற்று தொடங்கியது. இதை தொடங்கிவைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகை தந்தார். இதனால் வழிநெடுக சாலையின் இருபுறமும் பாஜவினர், பொதுமக்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் மோடி காரின் கதவை திறந்து வைத்து நின்றவாறு ரோட்ஷோ நடத்தினார்.