கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்று வட்டாரங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி அடுத்த ஆரல்வாய்மொழி, குமாரபுரம், தோவாளை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சுமார் 2000 ஏக்கரில் பிச்சி, மல்லிகை, கேந்தி, கோழிக்கொண்டை பூ, அரளி, துளசி என பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.