மும்பை: மும்பையில் உள்ள அம்பானி பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் பாந்த்ரா குர்லா வளாகத்தில், திருபாய் அம்பானி தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுக்கு மர்ம போன் கால் வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி அழைப்பை துண்டித்தார். அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.