கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆரம்ப பள்ளியில் பாம்பு இறந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட 30 மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்கத்தின் பிர்பும் மாவட்டத்தல் மயூரேஷ்வர் பிரிவில் அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.