சென்னை: காவல் துறையின் “காவல் கரங்கள்” மூலம் மீட்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்கள் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னையில் காவல் கரங்கள்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் தமிழக அரசின் “நல் ஆளுமை“ விருது வழங்கினார். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த “கருணைப் பயணம்-3” வழியனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,“காவல் கரங்கள்” மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் சமீபத்தில் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 160 (ஆண்கள்-122, பெண்கள்-38) நபர்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கி, 50 தன்னார்வலர்களுடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ராஜஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.