சென்னை: செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தொழிலதிபர் பாஸ்கரனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். சென்னையை சேர்ந்தவர் சசிகலாவின் உறவினரான பாஸ்கரன் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் மீது செம்மரக் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். ஜாமீனில் உள்ள நிலையில் பாஸ்கரன் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் கடந்த ஆண்டு 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.