ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் ஆளும் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், புதியதாக ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் குதிக்க ஆயத்தமாகி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரிவு தலைவர் சந்தீப் பதக், சமீபத்தில் ராஜஸ்தான் மாநில ஆம்ஆத்மி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.