திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் சரவண பொய்கை குளத்தை சீரமைக்கவேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. பல பகுதிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்குள்ள சரவண பொய்கை தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடிவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காவடி சுமந்துவரும் பக்தர்களும் சரவண பொய்கை குளத்தில் குளித்துவிட்டு மலைக்கோயிலுக்கு சென்று முருகனை வழிபடுகின்றனர். இந்த சம்பவம் நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.