விபத்துக்குள்ளான ரிஷப் பன்ட்க்கு உதவியவர்களுக்கு ஒன்றிய அரசின் விருது: உத்தராகண்ட் டி.ஜி.பி.அசோக் குமார் தகவல்

டேராடூன்: இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பன்ட் (25 வயது), கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கீ சென்றபோது, பன்ட் ஓட்டிச் சென்ற கார் நேற்று காலை 5.30 மணியளவில் சாலை தடுப்பில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. கார் விபத்தில் சிக்கிய  ரிஷப் பன்ட்க்கு உதவிய ஹரியானா போக்குவரத்துக்கழக பேருந்து ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு ஒன்றிய அரசின் நற்கருணை வீரன் விருதின் கீழ் கௌவுரவிக்கப்பட உள்ளனர் என்று உத்தராகண்ட் டி.ஜி.பி.அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: