தண்டையார்பேட்டை: பிராட்வே கடற்கரை சாலையில் வாடகை பாக்கி செலுத்தாத 200 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு, கடையின் அளவுக்கு ஏற்றார் போல் மாத வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீண்ட காலமாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் 59வது வார்டுக்குட்பட்ட பிராட்வே கடற்கரை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான செல்போன் கடை, விளையாட்டு பொருட்கள் விற்பனை கடை என 480 கடைகள் உள்ளன.