லக்கிம்பூர் கேரி: உத்தரபிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்ததால் பேஸ்புக் லைவில் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி அடுத்த மொஹல்லாவைச் சேர்ந்த சச்சின் தீட்சித் (25) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். மேலும் தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது காதலியுடன் திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அதனால் கவலையடைந்த சச்சின் தீட்சித், சுமார் 20 கி.மீ தூரத்தில் மற்றொரு நகருக்கு சென்றார்.