காதலை ஏற்க மறுத்ததால் பேஸ்புக் லைவில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

லக்கிம்பூர் கேரி: உத்தரபிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்ததால் பேஸ்புக் லைவில் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி அடுத்த மொஹல்லாவைச் சேர்ந்த சச்சின் தீட்சித் (25) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். மேலும் தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது காதலியுடன் திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அதனால் கவலையடைந்த சச்சின் தீட்சித், சுமார் 20 கி.மீ தூரத்தில் மற்றொரு நகருக்கு சென்றார்.

அங்கு தனது செல்போனில் பேஸ்புக் வீடியோ லைவை ஆன் செய்த அவர், மனமுடைந்த நிலையில் விஷம் குடித்தார். அந்த வீடியோவை பார்த்த சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விஷம் குடித்த சச்சின் தீட்சித்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக சச்சினின் காதலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: