இஸ்லாமாபாத்: பலுசிஸ்தானில் நடந்த வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ராணுவ கேப்டன் உட்பட 5 வீரர்கள் பலியானதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஐந்து இடங்களில் நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கேப்டன் உட்பட 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர்.