புனே: மகாராஷ்டிரா மாநிலம் மான் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜெய்குமார் கோர், அவரது உதவியாளருடன் மால்தான் அடுத்த புனே-பந்தர்பூர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பாலத்தில் இருந்து இறங்கும் போது, அங்கிருந்த பள்ளத்தில் கார் இறங்கியதால் விபத்துக்குள்ளானது. அதனால் எம்எல்ஏ ஜெய்குமார் கோர், அவரது உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.