சென்னை: பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடக்கோரி தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுப் பள்ளிகளில், பத்தாண்டுகளாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை உள்ளிட்ட 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய பல வருடங்களாக கோரி வருகிறார்கள்.