பெங்களூர்: பெங்களூர் நகரில் முதல் முறையாக நடைபெறும் தமிழ் புத்தக திருவிழா நாளை தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. திமுக தலைமயிலான ஆட்சி அமைந்த பிறகு புத்தக கண்காட்சிகள் அதிக என்னிக்கையில் நடைபெற்றுவருகின்றன, இதன் தொடர்ச்சியாக கர்நாடக வாழ் தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக பெங்களூர் நகரில் முதல் முறையாக தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இதனை நாளை மாலை 3 மணி அளவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில் சுவாமி அண்ணாதுரை துவக்கிவைக்கவுள்ளார். இந்த கண்காட்சியானது அல்சுர் பகுதில் உள்ள தமிழ் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.