சென்னை என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி : பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை Jun 24, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் முதல் அமைச்சர் கி.மு. கெ ஸ்டாலின் சென்னை எம்பிசி சென்னை: எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு திரும்பப்பெறப்படும் என பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மீத்தேன், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும். மேலும் ரூ.100 கோடி செலவில் திருக்கோவில்கள் புதுப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன் என ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். மேலும் நீதிக்கட்சி வரலாற்று தொடர்ச்சியில் திமுக ஆட்சி அமைத்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் அரசுக்கு சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துகொள்கிறேன் என தெரிவித்தார். கவர்னர் உரை ஒரு முன்னோட்டம் தான். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என கூறினார். கடந்த இரண்டு தினங்களாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இந்த அரசுக்கு சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துகொள்கிறேன் என தெரிவித்தார். … The post என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி : பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.
புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்
கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110 கோடியில் நவீன வசதிகளுடன் 6 மாடியில் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டம் வடசென்னை மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு
மாநகராட்சி ஆணையர் பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி: காவல் நிலையத்தில் புகார்
பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து வெளியேற வசதியாக நீர்நிலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விரைவில் தொடக்கம்: அகற்றப்படும் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் வீடு ஒதுக்கீடு
திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை