மைசூரு: கர்நாடகா-தமிழக அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர் வீரப்பன். இவருடன் இருந்தபோது, கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவில் உள்ள பாலார் பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இவ்வழக்கில் சாம்ராஜ்நகர் மாவட்டம், அனூர் தாலுகா, சந்தனபாளையா கிராமத்தை சேர்ந்த ஞானபிரகாஷ் கைது செய்யப்பட்டார். இவருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஞானபிரகாஷ் உச்ச நீதிம்னறத்தில் மேல்முறையீடு செய்ததில், 2014ம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
