ஹிசாரி: அரியானாவில் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா நேற்றிரவு ஹிசாரில் இருந்து சிர்சாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், துணை முதல்வர் சென்ற வாகனமும் அவரது கான்வாயில் சென்ற காரும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. துணை முதல்வர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில்,