ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி அரியப்பாக்கம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் சுமார் 35 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது அங்கன்வாடி மைய கட்டிடம் சேதம் அடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதன்காணமாக மழைநீர் கட்டிடத்தின் உள்ளே வருகிறது. அங்குள்ள மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. மாணவர்களின் புத்தக பைகளும் மழையில் நனைந்துவிடுகிறது.