சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு கோயில் மனைகளில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இதன்பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கோயில் மனைகளில் குடியிருப்போரின் நலனை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளேன். அதேபோல், வாடகை வசூல் செய்கிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொள்ளும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். சில இடங்களில் கடைகளை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துவதும் அவற்றை இடிக்கும் முயற்சியில் ஈடுபடுவது போன்ற விஷயங்கள் அதிர்ச்சியளிக்கிறது.