தாம்பரத்தில் வாக்குச்சாவடி பாஜ முகவர்கள் பயிலரங்கம்: செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் பங்கேற்பு

தாம்பரம்: செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ பிஎல்ஏ-2 வாக்குச்சாவடி முகவர்கள் பயிலரங்கம் மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. மாநில ஓபிசி அணி செயலாளர் ஜோதி, காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர், தாம்பரம் மேற்கு மண்டல தலைவர் கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்களை சந்தித்து மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் கூறுகையில், “பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகேயுள்ள குளத்தில் பல்லாவரம் பகுதியில் இருந்து கழிவுநீர் கொண்டு வந்து கலக்கின்றனர். இதை ஆய்வு செய்ய உள்ளேன். தாம்பரம் மாநகராட்சி 70 வார்டுகளில் உள்ள பிரச்னைகளை சரிசெய்ய மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்” என்றார்.

Related Stories: