கின்ஷாசா: காங்கோவில் கனமழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 120பேர் உயிரிழந்து விட்டனர். காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால், முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தலைநகர் கின்ஷாசாவின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ளது. நூறுக்கணக்கான வீடுகளை வெள்ளம் அடித்து சென்று விட்டதால் தலைநகரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் 120 பேர் உயிரிழந்தது விட்டதாக காங்கோ பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.