சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களின் உண்மை சான்றுகளை, அந்தந்த மாவட்டங்களில் சரிபார்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (டெட்) நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் நபர்கள், தங்களின் உண்மை சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால், விண்ணப்பத்துடன் சான்றுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற நபர்களின் விவரங்கள் அனைத்தும் அந்த நபர்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.