சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று அரசு பேருந்துகள் இயக்கப்படாது. பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து மேலாண்மை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டது.