டெல்லி: தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக நவம்பர் மாதம் தொடங்கியது. அக்டோபர் முதல் இதுவரை பெய்த மழை அளவு, தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையைவிட 3% குறைவு. இருப்பினும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன்படி, தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.