தலைமையாசிரியை சஸ்பெண்ட்

தேனி: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே காமராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியையாக ஈஸ்வரி உள்ளார். இப்பள்ளியில், கடந்த 4 ஆண்டுக்கான முன்னாள் மாணவர்களின் பழைய பாடப்புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. 250 கிலோ எடையுள்ள பழைய பாடப்புத்தகங்களை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல் தலைமையாசிரியை ஈஸ்வரி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கலாவதி, ஈஸ்வரியிடம் நேற்று விசாரணை நடத்தினார். விசாரணையில், 250 கிலோ எடையுள்ள பழைய பாடப்புத்தங்களை பழைய பேப்பர் வாங்குபவருக்கு எடைக்கு போட்டதை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, முறைகேடாக பள்ளிக்கு சொந்தமான பழைய பாடப்புத்தகங்களை விற்பனை செய்த தலைமையாசிரியை ஈஸ்வரி மீது, ஒழுங்கு நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கலாவதி உத்தரவிட்டார்.

Related Stories: