பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக கோளாறு உள்ளது. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால், அவரது மகளே தந்தைக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன் வந்துள்ளார். அதையடுத்து லாலுவுக்கு வருகிற 5ம் தேதி சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.