கேரளாவில் நாளை முதல் பஸ், ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்கிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பஸ், ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில்  கட்டணத்தை உயர்த்த கேரள அரசு தீர்மானித்தது. அதன்படி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ8 லிருந்து ரூ10 ஆகவும், ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ25லிருந்து ரூ30ஆகவும், டாக்சிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ250 லிருந்து ரூ300ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Related Stories: