சத்தியமங்கலம் அருகே மழை நீர் பள்ளத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பலி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மழை நீர் பள்ளத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பலியானது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கோணமூலை ஊராட்சிக்கு உட்பட்ட அக்கரை நெகமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். விவசாயியான இவர் நேற்று காலை தனது ஒன்றரை வயது பெண் குழந்தை உடன் அழைத்துக் கொண்டு தனது விவசாய தோட்டத்திற்கு சென்றார்.

அங்குள்ள சம்பங்கி பூ தோட்டத்தில் மோகன்ராஜ் வேலை செய்தபோது குழந்தை அப்பகுதியில் உள்ள மழை நீர் பெருக்கெடுத்து ஓடும் பள்ளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியது. இதைக் கண்ட மோகன்ராஜ் உடனடியாக தனது குழந்தையை காப்பாற்ற முயன்றதில் நீரில் மூழ்கிய குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்து நீரில் மூழ்கிய பெண் குழந்தையை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பெண் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: