நாகர்கோவில்: கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ம்தேதி, ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்துக்கு காரணமான முகமது ஷாரிக் தங்கி இருந்ததாக கூறப்படும் பகுதிகளில் மங்களூரு போலீசார் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்த கட்ட விசாரணைக்காக மங்களூரு போலீசார் நேற்று நாகர்கோவில் வந்தனர். பின்னர் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜிக்கு சென்று விசாரணை நடத்தினர்.