திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மாத்தூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள கைனாங்கரை பகுதியில் ரேஷன் அரிசியை விற்பனைக்கு வாங்கி மாவாக அரைத்து விற்கும் மாவு மில் ஒன்று அந்த பகுதியில் இயங்கி வருவதாக மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பையாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அளித்த தகவலின் படி திருச்சி மண்டல குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல எஸ்பி சுஜாதா தலைமையில், டிஎஸ்பி சுதர்சன், குளத்தூர் தாசில்தார் சக்திவேல், வட்ட வழங்க அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் அங்கு நேற்று மாலை 3 மணியளவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.