புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் சந்தையில் நேற்றிரவு 9.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இது குறித்த தகவல்அறிந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் 40 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து நடந்த பகுதியின் சாலைகள் மிகவும் குறுகலாக இருந்ததால், தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதுகுறித்து டெல்லி தீயணைப்பு பிரிவு இயக்குநர் அதுல் கர்க் கூறுகையில், ‘சாந்தினி சவுக்கில் ஏற்பட்ட தீயால், பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.