அகமதாபாத்: பிரதமர் மோடி பங்கேற்ற பிரசாரத்தில் ட்ரோனை பறக்கவிட்ட 3 பேரை குஜராத் போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் பாவ்லா கிராமத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று பறந்தது. இதையறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார், அந்த ட்ரோனை செயலிழக்க வைத்து தரையிறக்கினர். தொடர்ந்து ட்ரோனை பறக்கவிட்டதாக கூறி 3 பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரத் படேல் கூறுகையில், ‘பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வந்தார்.