காத்மாண்டு: நேபாள தேர்தலில் நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதில், ஆளும் நேபாள காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நேபாளத்தில் கடந்த 20ம் தேதி நாடாளுமன்றத்துக்கும், 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. அடுத்த நாள் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. நாடாளுமன்றத்தில் உள்ள 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடியாக வாக்கு எண்ணிக்கை மூலமும், மற்றவர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 550 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைகளில் 330 பேர் நேரடியாகவும், 220 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆளும் நேபாள காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள சிபிஎன் (யுஎம்எல்) கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.