ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி-உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சியை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ துவக்கி வைத்தார். மேலும் கூண்டுகளில் கடல் மீன் வளர்க்க 8 மீனவர்களுக்கு பணி ஆணையும் வழங்கினார். பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22ன் கீழ் தாமிரபரணி மற்றும் வைகை ஆறுகளில் 10 லட்சம் நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்வதற்காக ரூ.27 லட்சம் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் உலக மீன்வள தினத்தையொட்டி ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தலைமை வகித்து நாட்டின கெண்டை மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

மேலும் கூண்டுகளில் 40 சதவீத மானியம் மூலம் கடல் மீன் வளர்ப்பு மேற்கொள்ள 8 மீனவர்களுக்கு பணி ஆணை, மீன் விற்பனை செய்வதற்கு குளிரூட்டப்பட்ட 4 சக்கர வாகனத்திற்கு 40 சதவீத மானியத்தில் 2ம் கட்ட மானியமாக ரூ.4 லட்சத்திற்கான செயல்முறை ஆணை ஆகியவையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்எல்ஏ, மாவட்ட பஞ். தலைவர் பிரம்மசக்தி,  பேரூராட்சி தலைவர்கள் ஸ்ரீவை. சிநேகவள்ளி பாலமுருகன், ஆழ்வார்திருநகரி சாரதா  பொன் இசக்கி, ஸ்ரீவை. தாசில்தார் ராதாகிருஷ்ணன், மீன்வளம் மற்றும் மீனவர்  நலத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் அமல் சேவியர், மாவட்ட உதவி  இயக்குநர்கள் விஜயராகவன், அண்டோ பிரின்சி வயலா, திமுக மாநில இளைஞரணி துணை  அமைப்பாளர் ஜோயல், மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், திமுக மாவட்ட துணை  செயலாளர் ஆறுமுகபெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், துணை  அமைப்பாளர் பாலமுருகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் கொம்பையா, இசக்கி  பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகசுந்தரம், தர்மலிங்கம்,  அருண்கிருஷ்ணன், சின்னபாண்டி, ஸ்ரீவை.

நகர செயலாளர் சுப்புராஜ், அரசு  வழக்கறிஞர் ஷாஜகான், பேரூராட்சி முன்னாள் தலைவர் கந்தசிவப்பு, இளைஞரணி துணை  அமைப்பாளர்கள் காசி சண்முகம், இசக்கி குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர்  லட்சுமணன், துணை அமைப்பாளர்கள் செந்தில், அசோக், மந்திரமூர்த்தி, காங்.  வட்டார தலைவர் நல்லக்கண்ணு, ஐஎன்டியுசி சந்திரன், முன்னாள் நகர தலைவர்  சித்திரை, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராகவன், ஷகிலா பானு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரி இசக்கி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Related Stories: