சென்னை: காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது அல்லது தற்போதுள்ள தலைவரை மாற்றுவது பற்றி மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் டெல்லி போய், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை பார்த்திருக்கிறார்கள். தற்போதுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர், தலைவராகி 4 வருஷத்துக்கு மேல் ஆகி விட்டது. சில மாற்று கருத்துகள் இருக்கலாம். அதுபேசி தீர்க்கப்படும். புதிய தலைமையோ, பழைய தலைமையோ மத்திய காங்கிரஸ் தலைமை எடுக்க வேண்டிய முடிவு.