ராஜஸ்தானில் 4 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அடுத்த ஜரோலி நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரின் வீடு இன்று காலை திறக்கப்படாமலேயே இருந்தது. அதனால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல்கள் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணவன் - மனைவி தம்பதி மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகளும் இறந்த நிலையில் கிடந்தனர். அதிர்ச்சியடைந்த போலீசார் 6 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

6 பேரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, ​6 ​பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: