தேனி: தேனி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி வடபுதுப்பட்டி அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (37). இவரது வீட்டில் சிறுத்தை தோல் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி தலைமையில் வனச்சரகர் செந்தில்குமார், வனவர் ஆனந்தபிரபு ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.