விருத்தாசலம்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பிறகு சேத்தியாதோப்பு, கம்மாபுரம் விருத்தாசலம் வழியாக சேலம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக விருத்தாசலம் அருகே உள்ள கோ.பொன்னேரி புறவழிச் சாலை ரவுண்டானாவில் அதிமுகவினர் திரண்டிருந்தனர். இதற்காக வந்திருந்த அதிமுகவினர் விருத்தாசலம் சிதம்பரம் சாலையில் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றிருந்தனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக நோயாளியை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.