சென்னை: கால்பந்து வீராங்கனையும் கல்லூரி மாணவியான பிரியா மரணமடைந்த விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்டது. கால் சவ்வு பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவி பிரியாவின் கால் அகற்றப்பட்டது. கால்கள் அகற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவி பிரியா சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பால் ராம் சங்கர், சோமசுந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பேரவள்ளூர் போலீசார் கவனக்குறைவால் மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.